Thursday, April 21, 2022

பழைய மாணவர்களுக்கு ஒரு செய்தி. A BITTER INFO FOR THE ALUMNI










 

நேற்றைய செய்திக்கு ஒரு பின் குறிப்பு: முழு விவரத்தையும் தொலைபேசி வழியாகக்  கேட்ட பல மாணவ நண்பர்களுக்கு ஒரு விளக்கம்.

 

தவறான வழியில் முதல்வரான முனை.தவமணி, பத்தாண்டு மட்டுமே முதல்வர் பதவி என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மரியாதை கொடுக்காது தொடர்ந்து முதல்வர் பதவியில் நீட்டித்துக் கொண்டிருப்பதால் வழக்கொன்று தொடுக்கப்பட்டது. நீதியரசர் ‘இது ஒரு அரசின் ஆணை. அதை அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும்; நீதிமன்றத்தால் இதைச் செய்ய முடியாதென’ இரு மாதங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. அரசு விரைவில் ஆவன செய்யும் என்று நம்புகிறோம்.

 

இப்போது தெரிகிறதா புது செயலர் வேக வேகமாக இந்தக் கூடுகைக்கும், பாராட்டுக்கும் ஏன் விரைகிறார் என்று!

 

Spread the word to your A.C. friends.