Thursday, April 21, 2022

பழைய மாணவர்களுக்கு ஒரு செய்தி. A BITTER INFO FOR THE ALUMNI










 

நேற்றைய செய்திக்கு ஒரு பின் குறிப்பு: முழு விவரத்தையும் தொலைபேசி வழியாகக்  கேட்ட பல மாணவ நண்பர்களுக்கு ஒரு விளக்கம்.

 

தவறான வழியில் முதல்வரான முனை.தவமணி, பத்தாண்டு மட்டுமே முதல்வர் பதவி என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மரியாதை கொடுக்காது தொடர்ந்து முதல்வர் பதவியில் நீட்டித்துக் கொண்டிருப்பதால் வழக்கொன்று தொடுக்கப்பட்டது. நீதியரசர் ‘இது ஒரு அரசின் ஆணை. அதை அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும்; நீதிமன்றத்தால் இதைச் செய்ய முடியாதென’ இரு மாதங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. அரசு விரைவில் ஆவன செய்யும் என்று நம்புகிறோம்.

 

இப்போது தெரிகிறதா புது செயலர் வேக வேகமாக இந்தக் கூடுகைக்கும், பாராட்டுக்கும் ஏன் விரைகிறார் என்று!

 

Spread the word to your A.C. friends.

Tuesday, March 15, 2022

BUNKER IN OUR COLLEGE ... A NEW FRAUDULENT IDEA SOLD TO THE MEDIA

 

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். நம் முதல்வர் கிறிஸ்டோபர் தவமணி வளாகத்தில் பதுங்கு குழியைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார். பலதுறைகளில் சிறந்து விளங்கும் நம் முதல்வர் ஒரு தொல்பொருள் ஆய்வாளராகவும் விளங்குவதில் நமக்கு ஆச்சரியமில்லை. பத்தாண்டுகளாக நமது 40 ஏக்கர் வளாகத்தை அங்குலம் அங்குலமாகத் தோண்டி ஆய்வு செய்துவரும்போதுசில நாட்களுக்குமுன்செங்கமங்கலான ஒரு மாலை நேரத்தில் முதல்வர் அவர் தொண்டர்களுடன் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுமுதல்வருடைய கடப்பாறையில் ‘நங்ங்ங்....என்று விசித்திரமான சப்தம் எழுந்ததாகவும்அருகில் மண்வெட்டி தட்டுகளுடன் அகழ்வுப் பணியிலிருந்த துணைமுதல்வர்நிதிக்காப்பாளர் மற்றும் பல்வகையான டீன்கள்மகிழ்ச்சி வெள்ளத்தில் ‘ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... அல்லேலூயாஎன்று கூச்சலிட்டவாறு முதல்வர் நெம்பிய ஒரு டன் எடையுள்ள பாறையை முட்டுக் கொடுத்து தூக்கியபோது ஒரு ரகசிய வழி தென்பட்டதாகவும் ‘பிபிசிசெய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் மட்டுமே செல்லக்கூடியதாக அந்த வழி இருந்ததால் நம் முதல்வர் மட்டுமே உயிரைப் பணயம் வைத்து உள்ளே சென்று பூதக் கண்ணாடியால் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளார். முதல்வரை உள்ளே அனுப்பிவிட்டுஅவருடைய தைரியத்தையும் துணிச்சலையும் வியந்தவாறு நம் டீன்கள் பதட்டத்தில் விரல்களில் ரத்தம் வரும் அளவுக்கு அவரவர் நகங்களைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தனராம். இன்னும் சிலர் முழங்கால்களில் நின்று ஜெபிக்கத் தொடங்கிவிட்டனராம். முதல்வர் குழிக்குள் சென்று பலமணிநேரங்கள் ஆகிவிட்ட செய்தி வளாகம் முழுவதும் பரவிதுந்துபிகளோடும் கிண்ணரங்களோடும் வந்த நமது கல்லூரி பாடற்குழு ஜெபத்தோட்ட கீதங்களை பாடத்தொடங்கிவிட்டனராம். பலமணி நேரங்களுக்குப் பின் பலநூற்றாண்டு நூலாம்படைகள் சூழ வெற்றிக் களிப்போடு வெளிவந்த முதல்வர் ‘முடியாது என்றார்கள். நான் முடித்துக் காட்டினேன் என்றாராம். உணர்ச்சிவசப்பட்ட அவருடைய விசுவாசிகள் சிந்திய ஆனந்த கண்ணீரில் வளாகத்தில் ஒரு ஓடையே உருவானதாக வளாகவாசிகள் கூறுகிறார்கள். செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், 'அமெரிக்கன் கல்லூரியை வரலாற்றில் எவ்வளவு பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு பின்னுக்குக் கொண்டு சென்றுவிட்டேன். தனியொருவனாக இதைச் சாதித்துக் காட்டிவிட்டேன்என்றார்.

இந்த புதிய அகழாய்வுச் செய்தியைக் கேள்விப்பட்ட கீழடி ஆய்வாளர்கள் வைகை நாகரீகம் கீழடியிலிருந்து ஆரம்பிப்பதாகக் கருதினோம். அமெரிக்கன் கல்லூரி முதல்வரின் கண்டுபிடிப்பால் ‘வைகை நாகரீகம் கல்லூரி பதுங்கு குழியிலிருந்து தொடங்குவதாக ஒப்புக்கொள்கிறோம். இனி நாங்கள் கீழடி அகழ்வாய்வைத் தொரடவேண்டிய அவசியமில்லைஎன்று கூறி தங்கள் எல்லாவற்றையும் வெளியே எடுத்து சுத்தப்படுத்தி இந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி விளம்பரமாக மாற்றி இருக்கிறார். தனியாக நின்று கவனமாக விளம்பரத்திற்காகவே எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த செய்தி நம்முடைய ஊடகங்களின் இன்றைய பரிதாப நிலையைத் தெரிவிப்பதாக இருக்கிறது. ஆங்கில இந்து உட்பட செய்தியின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல் வெளியிட்டிருக்கின்றன. ஒரு புகழ்பெற்ற கல்லூரியின் முதல்வர் இப்படி வரலாற்றையே புரட்டுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். என்ன சொல்வது?

உண்மையில் இப்போது அமெரிக்கன் கல்லூரியின் தலையாய பிரச்சனை, முதல்வர் இன்னும் முதல்வராகவே இருக்கிறாரா? அவருடைய வழக்கு என்ன ஆனதுசெயலராக நீடிக்கிறாராஅடுத்தமாதம் சமபளம் வருமாஎன்பதுதான். இது முதல்வரும் அறிந்ததுதான். பொதுமக்கள் மத்தியிலும்

அரசு வட்டாரங்களிலும் சரிந்துவிட்ட தன் image ஐ தூக்கி நிறுத்த அவர் செய்யும் மலிவான உத்திகளே இத்தகைய விளம்பரங்கள்.

முதல்வர் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம். இது டிஜிட்டல் யுகம். பத்திரிக்கை செய்திகளை அப்படியே நம்பிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு ஊடகவியலாளர். நம்முடைய சாமர்த்தியங்களெல்லாம் மிக எளிதாக அம்பலமாகிவிடக்கூடிய காலம். அதனால் இனிமேலாவது இத்தகைய குறுக்குவழி விளம்பரங்களைக் கைவிட்டுநேர்மையாக முதல்வர் தன் கண்முன்னால் இருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும்.

 

 




i have personally seen this so called "bunker". it was then a place filled with all broken furniture. i was told the previous principal cleared the place. now ...here comes the GREAT DISCOVERY of christoper. probably Ukraine war became a nice opportunity for him to talk about WWI and a "bunker"! what an inventor!

 

Monday, March 14, 2022

IS OUR COLLEGE NOW A FALLEN ANGEL? SORRY STATE OF AFFAIRS IN OUR COLLEGE.

 

ஊழல் புகாரிலும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டிலும் 

சிக்கித் தவிக்கும் பிரபல கல்லூரி முதல்வர்.


சி.பி..பிடியில் 

அமெரிக்கன் கல்லூரி முதல்வர் கிறிஸ்டோபர் தவமணியும் 

பொருளாளர் ஷீலாவும்


வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமான பாடங்களை நடத்த கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி. சிறப்பு நிதி வழங்கி வருகிறது. கல்லூரிகளில் படிக்க வசதியில்லாத, உடனடியாக வேலைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பயனளிக்கவே இந்தப் பாடங்கள். இதற்கு வழங்கப்படும் நிதியை பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கான

ஊதியம் மற்றும் கருவிகள் வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமெரிக்கன் கல்லூரியில் யூ.ஜி.சி. விதிமுறைகளின்படி பயிற்சிபெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் ஏற்கனவே பணிசெய்யும் ஆசிரியர்களைப் பயன் படுத்தியுள்ளதோடு, அங்கு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களை வற்புறுத்தி மாணவர்களாக இணைத்துள்ளார். இது மிகப்பெரிய விதிமீறலாகும். ஏறத்தாழ 2கோடிக்கும் மேலான யூ.ஜி.சி. தொகையில் முதல் தவனையாக வந்த 92லட்சத்தில் 73 லட்சத்தை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் இதற்கு பொருளாளர் பேராசிரியர் ஷீலாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சகட்டமாக முதல்வர் தவமணியும் பொருளாளர் ஷீலாவும் அவர்கள் சொந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளதை அந்தக் கல்லூரி பேராசிரியர் பிரேம்சிங் என்பவர் ஆதாரங்களோடு வழக்குத் தொடுத்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக் கழகத்திற்கு புகார் மனு கொடுத்ததைத் தொடர்ந்து பேராசிரியர் பிரேம்சிங் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். சி.பி.. விசாரிக்கத் தொடங்கியுள்ள இந்த விவகாரம் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராகவும் செயலராகவும் இருந்து வரும் தவமணி கிறிஸ்டோபர், தொடர்ந்து பல்வேறுவிதமான சர்ச்சைகளில் சிக்கி வருபவர். 50க்கும் மேற்பட்ட சீனியர் பேராசிரியர்களை பின்னுக்குத் தள்ளி, பேராயராக இருந்த அவருடைய மாமனாரின் தயவில் முதல்வரானார். கல்லூரிக்குள் பெரும் கலவரத்தையும் வன்முறையையும் நடத்தித்தான் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பெற்ற பி.எச்.டி. பட்டம் முறைகேடாகப் பெற்றது என்ற வழக்கு இன்னும் உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பதவியேற்ற நாள் முதல் இதுவரை 80 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்திற்கு தலைக்கு 40 லட்சம் வரை மொத்தமாக 20 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளார். மாணவர் அட்மிசனுக்கு 25 ஆயிரங்கள் முதல் 1லட்சம் வரை சிக்கிய வரை லாபம் என்று கல்லா கட்டி வருகிறார். கட்டிடங்கள் கட்டுவதில் 40 சதவீதம் கமிசன், விடுதிக்கட்டணத்தில் கமிசன் என்று பத்தாண்டுகளில் பல நூறு கோடிகளைச் சொத்துக்களாகச் சேர்த்துள்ளார். ஆசிரியர்களை மிரட்ட அடியாட்களை வேலைக்கு வைப்பது, கேள்வி கேட்கும் ஆசிரியர்களை சஸ்பண்ட் செய்வது, விடுதி கட்டணக் கொள்ளையை எதிர்க்கும் மாணவர்களை மிரட்டுவது என்று ஒரு கிறிஸ்தவ மாஃபியாவாகத் செயல்பட்டு வருகிறார். காவல் துறை, ஜே.டி.சி அலுவலகம், உயர் கல்வித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என்று எல்லா இடங்களிலும் பினாமி ஜான்சன் தவமணி கிறிஸ்டோபரின் செல்வாக்கு யாரும் கற்பனை செய்ய முடியாதது. அவர் தாராளமாக வாரி வழங்கும் வைட்டமின் ''வின் சக்தி அப்படி என்று சொல்கிறார்கள். இவருக்கு பினாமியாக செயல்படுபவர் பெயிண்ட் கடை ஜான்சன். முதல்வருக்கு ஏற்படும் பாலியல் ரீதியான சிக்கல்களையும், மற்ற அப்பாயின் மண்ட் மற்றும் அட்மிசன் ரீதியான கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடைத்தரகராய் இருந்து வருபவர். கல்லூரிக்குள் முதல்வர் தவமணி செய்யும் அத்தனை அத்துமீறல்களுக்கும் பக்கபலமாய் இருந்து வருபவர்கள் முதல்வரின் நண்பர்களான உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் வணிகவியல் துறைத்தலைவரும். முதல்வரை எதிர்ப்பவர்களுடன் பஞ்சாயத்து செய்வது, மாணவர்களை, ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற செயல்களைச் செய்து வருபவர்கள். இதற்கு பிரதிபலனாக முதல்வருடன் வெளிநாடுகளுக்கு உல்லாச பயணங்கள் சென்று வருபவர்கள். முதல்வரின் இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி பேராசிரியைகளிடம் விசாரித்தால் பல விசயங்கள் வெளிவரும்.

மதுரையைச் சுற்றி பலநூறு ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டுள்ள தவமணி கிறிஸ்டோபர் கொடைக்கானலில் மட்டும் 4 பங்களாக்களை வாங்கிப் பராமரித்து வருகிறார். ஒரு சொகுசு பங்களாவில் ஹோம் தியேட்டர் மட்டும் 50 லட்சங்களாம். இந்த பங்களாக்களில் அரசு அதிகாரிகள் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்படுமாம். ஆகவே எந்த அரசுத்துறையும் அவர்மேல் கைவைக்க முடியாதாம். முதல்வரின் சொத்து மதிப்பு 200 கோடிகள் என்று கணக்கெடுத்தபின்னும் வருமான வரித்துறையோ , லஞ்ச ஒழிப்பு துறையோ வேடிக்கை பார்ப்பதன் காரணம் ஊகிக்க முடியாததல்ல. முதல்வர் தவமணிக்கு ஜெர்மன் கார்கள் என்றால் அலாதி பிரியம். அவர் வைத்திருக்கும் கார்களின் பட்டியல் தமிழக முதல்வர் வைத்திருக்கும் கார்களின் பட்டியலைவிட நீளமானது. பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி, ஸ்கோடா. இவ்வளவு புகார்களுக்குப் பின்னும் முதல்வர் தவமணி சென்ற மாதம் வாங்கியிருக்கும் ஆடி காரின்'விலையே 70 லட்சம் மட்டுமே. கொடுக்கல் வாங்கலில் கல்லூரி முதல்வர் பிஸியாக இருப்பதால் மாணவர்கள்மேல் கவனம் செலுத்துவதில்லையாம். அமெரிக்கன் கல்லூரி விடுதியில் மாணவர்கள் சிலர் கஞ்சா வியாபாரம் செய்துவந்த விசயம், அப்போதைய கமிஷனர் வரை போய் தவமணியை கடுமையாக எச்சரித்து அனுப்பினாராம் அப்போதைய கமிஷனர். பாரம்பரியமிக்க கல்லூரியின் பெயர் கெடக்கூ டா தென்று அந்த விசயம் காவல்துறையின் நடவடிக்கைக்குள்ளாகாமல் மூடப்பட்டது.

இவை ஒரு புறமிருக்க, இளம் பெண் பேராசிரியர்களை ஒருமையில் அழைப்பது, வா புள்ள, போ புள்ள என்று செல்லமாக பேசுவது, இந்த சேலை உனக்கு நல்லா இல்ல என்று விளையாடுவது கண்டு பெண் பேராசிரியர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இது குறித்து விசாரித்தால் அதிர்ச்சியூட்டும்

உண்மைகள் வெளிவரும். அவருக்கு எதிராக மூச்சு விட்டாலே அவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார் ஒரு இளம் பேராசிரியை. முதல்வருடைய பிறந்த நாள் ஒன்றில் மாணவிகளும் இளம் பேராசிரியர் ஒருவரும் அவருக்கு கேக் ஊட்டி, அவர் முகத்தில் கேக்கைத் தடவி விளையாடிய வீடியோ கல்லூரி வட்டாரத்தில் பிரபலம். இந்த முறைகேடுகள் குறித்து மூத்த பேராசிரியர்கள் பலமுறை கல்லூரி கவுன்சிலுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே அரசு விதியின் படி தவமணி கிறிஸ்டோபரின் முதல்வர் பதவிக்காலம் முடிவுக்கு

டது. கடந்த அக்டோபர் மாதத்தோடு முதல்வருக்கான 10 ஆண்டு காலம் நிறைவடைவதால் அவர்முதல்வராக நீடிக்க முடியாது. தவமணி ஓய்வு பெற இன்னும் 3ஆண்டுகாலம் உள்ளதால் அது வரை முதல்வராகத் தொடர்வேன் என்று வழக்கு மன்றத்தை நாடியுள்ளார். பணி நீடிப்பு விசயத்தில் தமிழக உயர்கல்வித்துறையின் தயவும் தமிழக அரசின் தயவும் தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொரானா நிதியாக 25லட்சத்தை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளார். தமிழகத்தில் எந்தக் கல்லூரியும் இத்தகைய நிதி வழங்கியதாகத் தெரியவில்லை என்பதோடு, ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை இப்படித் தன் சுயநலத்துக்காக நன்கொடையாக வழங்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று மூத்த ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

ஏற்கனவே அதிமுக அரசை சமாளித்ததுபோல் ஊழலற்ற ஆட்சி வழங்குவதில் முனைப்பாக இருக்கும் திமுக அரசையும் சமாளித்து பதிவியில் தொடர்ந்தே தீருவேன் என்று சவால் விட்டுள்ளாராம் தவமணி கிறிஸ்டோபர். தவமணி கிறிஸ்டோபர் பதவி ஏற்ற நாள் முதல் கல்லூரியின் தரம் தாறுமாறாக ஆகிவிட்டது. ஆண்டுதோறும் இந்தியாவின் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. நூறு சிறந்த கல்லூரிகளில் மதுரையின் தியாகராஜா கல்லூரியும் லேடிடோக் கல்லூரியும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கன் கல்லூரி 200க்கு அருகாமையில் உள்ளது. இதுதான் முதல்வரின் சாதனை.

சமீபத்தில் தீடீரென மதுரை மாணவர்கள் ஆன் லைன் தேர்வுதான் எழுதுவோம் என போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் எங்கிருந்து தொடங்கியது என காவல்துறை புலன்விசாரணை செய்யத்தொடங்கியது. விசாரணையில் இந்தப் போராட்டம் மதுரையிலிருந்து அதிலும் அமெரிக்கன் கல்லூரியில் அதன் முதல்வரான தவமணியால் திட்ட மிட்டு உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடித்தனர். கட்டண வசூலுக்காக கணக்கில்லாமல் மாணவர்களைச் சேர்த்ததன் விளைவாக, கொரானா கால கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றமுடியாது என்பதாலும், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த ஆன் லைன் தேர்வுதான் வசதி என்பதாலும் முதல்வர் தவமணியே இந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டார் என்பதை வாட்ஸ் அப் செய்திகள், முதல்வர் மாணவர்களுடன் பேசிய வீடியோ போன்ற ஆதாரங்களைக் கண்டு அனைத்து கல்லூரி முதல்வர்கள் முன்னிலையில் தவமணியை எச்சரித்து அனுப்பியுள்ளார் மதுரை ஆட்சியர் முதல்வர் பதவிக்கு வருவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களை வைத்தே பெரும் கலவரத்தை வெற்றிகரமாக நடத்தியவர் என்பதையும் சக ஆசிரியர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

மைனாரட்டி என்ற போர்வையில் ஒரு பாரம்பரியமான கல்வி நிறுவனத்தை நாசமாக்கி வருவதை

ர் கல்வித்துறை கண்டு கொள்வதில்லையாம். ஏனெனில் உயர்கல்வித்துறையே தவமணி கிறிஸ்டோபரின் கவனிப்பில் இருக்கிறதாம். 10 ஆண்டுகள்தான் முதல்வர் பணிக்காலம் என்ற அரசு ஆணையையை எனக்காக தமிழக அரசு மாற்றும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். 2025 வரை என்னை யாரும் அசைக்கமுடியாது என்று சவால் விட்டுள்ளாராம் தவமணி கிறிஸ்டோபர். தவணியின் சவாலுக்கு தமிழக அரசின் எதிர்வினை என்னவாக இருக்கப்போகிறது? உயர் கல்வித்துறை அமைச்சரும் தமிழக முதல்வரும் நல்ல முடிவை எடுத்து கல்லூரியைக் காப்பாற்றினால்தான் உண்டு என்கிறார்கள் மூத்த பேராசிரியர்களும் கல்லூரியின் நலன் விரும்பிகளும்.

 

 *****

Prof.Dr. PREM SINGH filed a case against his suspension and won the case. he is now back in the college. CBI has filed a case against Christoper for the alleged fraud on UGC grant.


Sunday, November 7, 2021

REQUEST FOR SOME MONETARY HELP - FOR THE SAKE OF OUR COLLEGE

 

My previous post was titled: HOW IS OUR GREAT "HEAVENLY" COLLEGE NOW? In that post, I had given the cases pending against the present principal.

 

Prof. Prem Singh's case was on his report of corruption of  Rs. 75 lakhs of UGC grant. CBI has taken the case.

 

Two more cases are filed: one in my name and another by Prof. Prabha Vedamanickam, quoting the recent G.O. of TamilNadu Government which states that anyone can be principal of a college only for 10 years. (the current principal's ten year "tenure' came to an end on 27th of last month.)

 

All the three cases are grouped and hearing has been fixed in the second week of November.  Professors less than the number of a handful are fighting this legal battle. Money has become the main criterion. So far only these less-than-a-handful professors are trying to cope up with this tight position.

 

I request people who are interested in making our college as good as it was, to help these professors to conduct the costly legal battle.

 

Anyone interested in helping them can contact the  two professors.

spremsing1965@gmail.com

profprabahar@gmail.com

Friday, October 22, 2021

SAD DEMISE OF ANOTHER FRIEND .... DR. KARUPIAH JAYARAJ

 




எழுபதுகளில் அமெரிக்கன் கல்லூரியில் பணி புரிந்து என்னோடு நன்கு பழகிய நண்பர் பேரா.முனைவர் ஜெயராஜ். மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் கழகம் ஆரம்பிப்பதற்கு சில நண்பர்கள் முயற்சியெடுத்துக் கொண்டிருந்தனர்; பொதுவாக, கல்லூரி நிர்வாகங்கள் இந்த முயற்சிக்கு எதிராக இருந்தன. ஜெயராஜிற்கு நண்பராக இருந்த பேரா. ராஜன் என்பவர் இந்த முனைப்பில் முன்னணியில் இருந்தார், அவர் ஜெயராஜைப் பார்ப்பதற்காக ஒரு நாள் மாலை எங்கள் கல்லூரிக்க்கு வந்தார். நானும் ஜெயராஜும் டென்னிஸ் என்ற பெயரில், விளையாட்டு என்ற பெயரில் ஏதேதோ விளையாடிக்கொண்டிருந்தோம்.

பேரா. ராஜன் ஆசிரியர் கழகம் ஆரம்பிப்பது பற்றி பேச ஆரம்பித்ததும் ஜெயராஜ் என்னையும் உடன் சேர்த்துக் கொண்டார். ராஜன் மிக ரகசியமாக இது போன்ற தெரிந்த நண்பர்கள் மூலமாகவே முயன்று கொண்டிருந்தார்; ஆனால் அவர் எங்களிடம் இதைச் சொன்ன போது நாங்கள் முதல்வரைப் பார்க்கலாம் என்று அவரிடம் சொன்னோம். அவர் ரகசியாக இருக்க வேண்டிய கட்டாயம் பற்றிச் சொன்னார். அவர் அப்போதுதான் இன்னொரு கல்லூரியில் ஒரு சில ஆசிரியர்களை ரகசியமாகச் சந்தித்து வேறு ஏதோ ஒரு இடத்தில் முதல் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.

கள நிலவரம் இவ்வாறு இருக்கும் போது நாங்கள் முதல்வரிடம் போவோம் என்று சொன்னது அவருக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் அவர் நம்ப முடியாதபடி எங்கள் கல்லூரி அனைத்து ஆசிரியர்களையும் ராஜன் சந்தித்துப் பேச, நாளும் நேரமும் குறிப்பிட்டு கல்லூரி ஆசிரியர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் எங்கள் முதல்வர்.

கழகமும் ஆரம்பித்தது. பெரிய கல்லூரியில் நிறைய உறுப்பினர்களோடு ஆரம்பித்ததால் ஜெயராஜிற்கு காசாளர் பதவியளிக்கப் பட்டது. ஆனால் சில மாதங்களில் ஜெயராஜ் முனைவர் பட்டத்திற்காக கல்லூரியை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அதன் பின் தற்காலிக காசாளராக நான் சில மாதங்கள் இருந்தேன் என்று என் பள்ளி நண்பனும், ஆசிரியர் கழகத்தின் பெருமை மிகு தலைவராக இருந்த பார்த்தசாரதி பின்னாளில் எனக்கு நினைவுபடுத்தினார்!

மிகப் பல ஆண்டுகள் கழித்து முக நூல் வழியாக மீண்டும் நானும் ஜெயராஜும் இணையத்தில் சந்தித்தோம். பார்க்கும் போது அத்தனை பரவசம் இருவருக்கும். Appearances are deceptive என்பார்களே அது போல் ஜெயராஜ் பார்ப்பதற்கு நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகத் தோன்றியது. ஆனால் இதயக் குறைபாடு ஒன்றினால் நலமில்லாமல் இருக்கிறார் என்று அறிந்த போது மிக வருத்தமளித்தது. மனதை உருத்தியது. தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த நான் சில நாட்களாக அவரிடம் பேசவில்லை. அவரைப் போல் எனக்கும் கொஞ்சம் depression. மீண்டும் பேச ஆரம்பித்தோம். எல்லாம் ஓரிரு மாதங்களே. இந்தச் சமயத்தில்தான் அவர் தன் துணைவியாரோடு பயணம் செய்த வெளிநாட்டுப் படங்கள் என்று உற்சாகமாக முகநூலில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்.

காலம் முடிந்தது. உடல் நலம் பற்றித் தெரிந்திருந்தாலும் அந்தச் செய்தி ஆழமாகத் தைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தன் உடலை அமெரிக்கப் பல்கலைக் கழகத்திற்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார் என்பது தெரிந்த போது … இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்கு நான் நண்பனாக இருந்திருக்கிறேனே என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.

HOW IS OUR GREAT "HEAVENLY" COLLEGE NOW?

 














Saturday, December 12, 2020

A SHISYA AND HIS GURU ...

 

A EULOGY 

of an alumnus of our college, 

Mr. SOMASUNDARAM, 

Commandant, Indian Coast Guard 

on

PROF. R. PADMANABHAN NAIR

*****

Prof RP Nair, My Pole Star!

In our country since beginning of the Vedic Age, the relationship between the Guru and his Shishya has been the much celebrated one! This unique relationship has a certain place in one's bosom and remains as lifelong memory with both or either of the survivor!

 

     I being the survivor, since my beloved teacher and mentor Prof RP Nair passed away yesterday, would like to share some of the memories I cherish about him.

 

1989-91. After my graduation in Chemistry, I wanted to do post graduation in English, that too at the prestigious American College, Madurai. Post Graduation in English Literature from the American College is a dream for many students in Tamil Nadu. Only a  few lucky ones like me could realize it, while still it remains a dream for many. I prepared hard for the entrance exam and having qualified appeared for the interview. Prof RP Nair was the HOD of PG English Department. I was anxious to face the interview panel consisting of five illustrious professors of English Literature like Dr Paul L. Love, Prof RP Nair, Prof J Vasanthan, Prof R Nedumaran, and Dr. Pramila Paul. The members put me at ease at the very beginning and I was at home with them. What I feared most was the grueling interview! But it became a friendly chat! Since I had not read much in English Literature and  my reading was only limited to the non-detailed text in Part-I English of B.Sc program, the interview panel was only trying to find out my passion for literature unmindful of my poor Spoken English and limited knowledge about English Literature. The interview still remains in my memory as it was the first interview in my life! Needless to mention that I qualified in the interview also, a remarkable feat indeed considering my Non-English major background!

 

Prof RP Nair, taught us the Aspects of Prose in the first semester. What could have been mundane prosaic sessions were turned into poetic ones by the magical wand of him, who made us understand the 'unseens' and appreciate the nuances of lyrical prose! My poetic persona was turning prosaic, and the prosaic persona was turning poetic! And I could feel the  metamorphosis happening simultaneously during his class! What an imaginative method of teaching! He would soak us in the literary brook and make us feel as fresh as dew-dropped flowers! His classes used to be more participative and he used to encourage discussions. I was a green horn at that time (not that it has become grey now!) but he used to handle me maturely. I still laugh at my foolishness of having entered into some stupid arguments, while at the same time rave about his deft handling of such morons with knowledge and maturity. He guided me into the correct path of literary appreciation without making me feel inadequate or insecure. That is his greatness! My inquisitive self always found an answer in him for he was a walking encyclopaedia! I used to remember the Guru-Shishya parampara fables that I had been reading since my childhood!

 

Francis Bacon, the father of English essays says, "Reading makes a complete man, conference a ready man, and writing an exact man." Nairji, as we affectionately addressed him, was a visual embodiment of all the above rolled into one! He was a voracious reader, powerful orator, and a prolific writer! Need not these qualities enough for inspiring his students! Having heard about his reading skills I wanted to emulate him and used to read in the PG English Department library till 11pm. Whatever I've read in those two years from 1989-91 holds me in good stead even now. That was his motivation! Till I joined PG English program, I was proud of my Tamil heritage and literature. Nairji opened the window to the world literature and made me see the vignettes of world literature. But for him I would have remained a Tamil fanatic! In that sense he was my eye opener!

 

Before the end-of-semester exams we would be assigned a project paper for every course of that semester. If Madurai Kamarajar University followed only two papers per semester, the American College, being an autonomous institution, followed five papers per semester. You can guage the depth of our studies by this! Nairji taught us European Literature in translation. Samuel Beckett's 'Waiting for Godot' is a French play translated into English. The play is about the Christian belief of God's coming again and the characters' hopeless wait for His coming! I argued with Nairji that though the play was based on the Christian belief, what made the play unique was its universal appeal of waiting for the God! Nairji asked me to clarify my point. I said that in all religions of the world God's coming is the main hope for human beings' salvation. In the Bhagavad-Gita, Lord Krishna says that whenever there is adharma he'll reincarnate and come to the rescue of humankind! Nairji encouraged me to do a  project paper on the subject and I submitted my project paper, "Waiting for Godot from the view point of the Bhagavad-Gita." Nairji not only appreciated the paper but also forwarded to Dr. Charles Ryerson, Professor and Head of the Department of Religion & Theology, Princeton University, USA. Dr. Charles Ryerson, my another mentor, held that it was the best paper he had ever received  and published it in the Princeton University journal. This is just to highlight to what extent a teacher can catapult his student!

 

When I chose to translate TS Eliot's much difficult poem, "The Waste Land" as a project for my 'Translation Problems & Techniques' paper, I turned to Nairji for help. The Waste Land is one of the great poems written in the 20th century about the degradation of moral values in the Western society in the aftermath of the world wars. The poet laments about the moral degradation and seeks solution in the Eastern religious beliefs, particularly the Vedic scriptures. He ends the poem with quotes from Brihadharanyaka Upanishads, Datta (charity), Damyata (Self-discipline), and Dayaatva (empathy) as solutions to the moral degradation which will result in Shanti, Shanti, Shanti! The poem is so challenging not only because of its length but also because of its references to various religious texts! More so the liberal usage of diction and phrases from French, German, and Sanskrit makes it more complicated! Since the poem had been translated into Malayalam by the doyen of Malayalam Literature, Ayyappa Panikker, and Nairji was his student, I couldn't find anyone better than him. As Nairji read out the poem translated into Malayalam as Tharisu Bhoomi in Malayalam, I transcribed the same in Tamil just to understand the nuances and lyrics of it! Instead of translating directly into Tamil, I was able to translate it through the poetic vehicle of Malayalam. And the credit entirely goes to Nairji for working besides me with true care and patience. Till date the translated work of mine titled, Tharisu Nilam, remains my priceless possession! That sort of commitment is very rare now, and I was fortunate being his student!

 

I can go on endlessly on my meandering stream of consciousness, but the two most valuable lessons I learnt from Nairji are Hope and Principled Steadfastness! When I passed out MA English in first class, Nairji was more happy than me for by then our relationship had  become that of a father and his son. When I asked him, "Sir, now that you've equipped me with knowledge and language, what's the purpose studying  literature and how it helps in serving the society?". Nairji replied in his inimitable style, "The purpose of studying literature is to remain hopeful in all circumstances and to stand up with moral courage to say NO to self-serving authority in whichever form." Nairji, I hope I've imbibed your teaching not only in every word, but also every letter of it! Among the galaxy of teachers in the American College, you will remain my Pole Star alongwith Dr. Paul L.Love! Kindly lead me to the light of knowledge and wisdom!

 

Rest In Peace Beloved Nairji!